techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs |
- World News Today 31-01-2013 | World Today 31-01-16 | World News 31-01-2013 | World News Today 31-01-2013 | Polimer Tv News - 31-01-13 | Ulagil Indru - Polimer News
- Comedy Actor Nagesh Ninaivu Naal
- Jayalalitha’s Vishwaroopam initiative - Sarathkumar
- மேலாடையை உருவிய ஹீரோ
- நான்நினைத்திருந்தால் நிரந்தரமாக தடைசெய்திருப்பேன்- ஜெ.
- கமல் உண்மையான அக்கறைகாட்டவில்லை
- கருணாநிதியை சும்மா விடமாட்டேன்
- Vishwaroopam Latest News 31-01-2013
- அமெரிக்கக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே…
- Kasedhan Kadavuladaa - Singamuthu Tamil Movie Comedy
- பொட்டு சுரேஷ் வெட்டிக்கொலை மதுரையில்
- ஆசீட் வீச்சு-முற்றுப்புள்ளி எப்போது? சென்னையில் இளம்பெண் பாதிப்பு
- Shivam Vijay Tv Serial - 31-01-13 | Shivam 31st January 2013 | Vijay Tv Serial 31st January 2013 | Vijay Tv Shivam 31st Jan 2013 | Vijay Tv Serial Shivam 31-01-13 | Shivam 31.01.13 | Watch Shivam Serial 31st January 2013
- Corruption in school education - Debate - 31-01-13
- சட்டம்,ஒழுங்கை பாதுகாக்கவே விஸ்வரூபம் படத்திற்கு தடை: முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம்
- விஸ்வரூபம் : சிக்கல்களும், சவால்களும்
- Kaakkaa Muttai Movie News
- Girl likes Boy’s Style and Action – Neeya Naana
- Vaniga Seithigal 31-01-2013 - Sun tv Trade news
- Virunthinar Pakkam – Sooriya Vanakkam Sun TV 31-01-2013
- Ungalal Mudiyuma?
- Lucky Biker Nearly Crushed by Truck
- Funny Video – Shortest Wedding in History!
- Most drumbeats in a minute, hand drumming – Guinness World Records
- Settai Movie Official Trailer – Arya -Santhanam – Premgi – Hansika – Anjali – Nasser
| Posted: 31 Jan 2013 12:13 PM PST |
| Comedy Actor Nagesh Ninaivu Naal Posted: 31 Jan 2013 12:06 PM PST |
| Jayalalitha’s Vishwaroopam initiative - Sarathkumar Posted: 31 Jan 2013 12:04 PM PST |
| Posted: 31 Jan 2013 11:55 AM PST செல்பேசி தனது திரையுலக வாழ்க்கைக்கு அவ்வளவு 'நல்பேசியாக' அமையவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகத்தோடு நடமாடிக் கொண்டிருக்கிறார் நடிகை இனியா. 'தங்கர்பச்சான் அழைத்தால் மறுபடியும் அவர் படத்தில் நடிப்பீர்களா?' என்ற கேள்வியை சிரித்த முகத்தோடு எதிர்கொள்ள அவருக்கு எப்படிதான் பக்குவம் வந்ததோ, அந்த புத்தனுக்கே புரியாத ரகசியம் அது. 'நல்ல கதையா இருந்தா கண்டிப்பா நடிப்பேன்' என்ற இனியாவுக்கு அடுத்த படமாக வரப்போவது 'கண்பேசும் வார்த்தைகள்'. ஷங்கர் தயாரித்த சில படங்களுக்கு நிர்வாக தயாரிப்பாளராக இருந்தவரும், 'உயிர்' பட தயாரிப்பாளருமான பாலாஜியின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் இது. (கொழுந்தனுக்கு அண்ணி கொக்கி போடுவாளே... அதே படம்தான்) மிர்ச்சி செந்தில் சின்னத்திரையில் 'சரவணன் மீனாட்சி' தொடரில் ஹீரேவாக நடித்து வருகிறார். இப்படத்தில் இனியாவின் நாயகன் இவர்தான். 'என்னை நடிக்கணும்னு பாலாஜி சார் கூப்பிட்டு கதை சொன்னப்போ முழு கதையும் சிங்கப்பூர்ல நடக்குதுன்னு சொன்னார். நானும் சட்டுன்னு ஓ.கே சொல்லிட்டேன். ஏன்னா சிங்கப்பூரை நான் பார்த்ததேயில்ல' என்றார். அவர் சொன்ன மாதிரியே சிங்கப்பூரின் சந்து பொந்தெல்லாம் இப்படத்தில் காட்டியிருக்கிறார்களாம். ஒருமுறை சிங்கப்பூரை சுற்றி வந்த உணர்வு இருக்கும் உங்களுக்கு என்ற உத்தரவாதத்தை தந்தது சில பாடல் காட்சிகள். மறுபடியும் இனியாவிடமே வருவோம். இப்படத்தில் ஒரு காட்சியில் செந்தில் இனியாவின் மேலாடையை உருவுவதுபோல காட்சி இருக்கிறது. எப்படி ஃபீல் பண்ணினீங்க என்று அந்த காட்சியை பற்றி பிரித்து மேய்ந்தார்கள் நிருபர்கள். இப்பதான் அந்த பாடல் காட்சியை பார்க்கிறேன். ரொம்ப ஓவரா நடிச்சுட்டோம்னு தோணுது. இருந்தாலும், என்னால இப்படியும் நடிக்க முடியும்னு இந்த காட்சி நிரூபிக்குது என்றார் இனியா. கதைக்கு தேவைப்பட்டா இனிமேல் இப்படியே தொடர்ந்து நடிக்கலாம்னு இருக்கேன் என்ற இனியாவின் பதிலுக்கு இன்டஸ்ட்ரியே சேர்ந்து கேக் வெட்ட வேண்டிய நேரம் இது. அப்படியே இன்னொரு விஷயம். நடிப்பை நிரூபிக்க இப்படியெல்லாம் வழி இருப்பது தெரியாமலே அநேக நடிகைகள் நடிப்பை கசிக்கி பிழிகிறார்களே, அதை நினைச்சாதான் ரொம்ப வருத்தமா இருக்கு! |
| நான்நினைத்திருந்தால் நிரந்தரமாக தடைசெய்திருப்பேன்- ஜெ. Posted: 31 Jan 2013 11:51 AM PST நான் நினைத்திருந்தால் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசின் சினிமா முறைப்படுத்தும் சட்டம் 1995ன் கீழ் நிரந்தரமாக தடை செய்திருக்க முடியும். ஆனால் எனக்கு எந்தவிதமான பகைமை உணர்வும் இல்லை என்பதால்தான் சிஆர்பிசி 144 சட்டத்தின் கீழ் தடை செய்தேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு திரைப்படத்தைத் தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. தமிழ்நாடு சினிமா முறைப்படுத்தும் சட்டம் 1955 என்று ஒன்று உள்ளது. அச்சட்டத்தின் 7வது பிரிவி்ன் கீழ் மாநில அரசுக்கு ஒரு திரைப்படத்தைத் தடை செய்யும் முழு அதிகாரமும் உள்ளது. அந்த சட்டப் பிரிவின் கீழ்தான் டேம் 999 படம் தடை செய்யப்பட்டது. அதை உச்சநீதிமன்றமும் சமீபத்தில் உறுதி செய்தது. எனது அரசு நினைத்திருந்தால், நான் நினைத்திருந்தால், விஸ்வரூபம் படத்தை நான் நேரடியாக அந்த சட்டப் பிரிவின் கீழ் தடை செய்திருக்க முடியும். நான் அதை செய்யவில்லை. சிஆர்பிசி 144 சட்டப் பிரிவின் கீழ்தான் தடை செய்தேன்.அதுவும் கூட 15 நாட்களுக்குத்தான். இதன் மூலம் நான் எந்தவிதமான உள்நோக்கத்துடன் நான் செயல்படவில்லை என்பதை உணர முடியும். இந்தப் படத்துக்கு எதிராக அரசியல் ரீதியாக நானோ, எனது அரசோ செயல்படவில்லை என்பதையும் உணர முடியும் என்றார் ஜெயலலிதா. |
| கமல் உண்மையான அக்கறைகாட்டவில்லை Posted: 31 Jan 2013 11:50 AM PST விஸ்வரூபம் படத்தை முஸ்லீம் தலைவர்களிடம், பிரதிநிதிகளிடம் முன்பே கமல்ஹாசன் காட்டியிருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை வளர்ந்திருக்காது. ஆனால் அவர் உண்மையான அக்கறையுடன் அவர் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதுகுறித்து அவர் கூறியதாவது... விஸ்வரூபம் படம் தொடர்பாக 24 முஸ்லீம் அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்புகளின் பிரதிநிதிகள் தலைமைச் செயலாளரிடம் புகார்களைக் கூறி மனு அளித்தனர். இதையடுத்து அதை உள்துறைச் செயலாளருக்கு தலைமைச் செயலாளர் அனுப்பிவைத்தார். படத்தத் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் ஒரே குரலில் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் கமல்ஹாசனிடம் அரசுத் தரப்பில் பேசியுள்ளோம், உங்களது ஆட்சபனைகளைப் பரிசீலித்து தேவையானதைச் செய்யுமாறு கூறியுள்ளோம் என்று அரசுத் தரப்பில் முஸ்லீம் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதே அதைக் கமல்ஹாசன் கவனித்து சரி செய்ய முன்வந்திருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை வந்திருக்காது. ஆனால் கமல்ஹாசன் என்ன செய்தார்... தன்னை சந்தித்த முஸ்லீம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் படம் போட்டுக்காட்ட ஒரு தேதி சொன்னார். அன்று அவர்கள் போனபோது பட ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் வேறு தேதியில் படம் காட்டுவதாக கூறினார்கள். ஆனால் கூறியபடி படம் காட்டப்படவில்லை. இப்படியே ஒரு மாதம் போய்விட்டது. இந்த நிலையில் டிடிஎச்சில் படம் திரையிடுவது தொடர்பாக கமல்ஹாசனுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதன் விளைவாக படம் ஜனவரி 25ம் தேதிக்கு ரிலீஸாவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஜனவரி 21ம் தேதிதான் இஸ்லாமிய பிரதிநிதிகளுக்குப் படத்தைப் போட்டுக் காட்டினார் கமல்ஹாசன். அதன் பின்னர் 22ம் தேதி இஸ்லாமியப் பிரதிநிதிகள் அமர்ந்து படம் குறித்துப் பேசினர்.இறுதியில் படத்தைத் தடை செய்யக் கோருவது என்று முடிவெடுத்தனர். இதையடுத்து 23ம் தேதி உள்துறைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தனர். படத்தை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் பல்வேறு தொடர் போராட்டங்களையும் அவர்கள் அறிவித்தனர். இதையடுத்து 23ம்தேதி அரசு உயர் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. தியேட்டர்கள் முன்பு போராட்டங்கள் நடத்தப்படும், முற்றுகை நடத்தப்படும் என்பது உள்ளிட்ட போராட்ட அறிவிப்புகள் குறித்து அரசு சாதக, பாதக நிலையை அலசிப் பார்த்தது. ஒரு வேளை போராட்டம் நடந்து, வன்முறை மூண்டால் அதைக்கலைக்க, ஒடுக்க தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு என்று போக நேரிடும். அப்படி நடந்தால் குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீது அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி போன்றவர்களும், மீடியாக்களும் பேச ஆரம்பித்து விடுவார்கள். எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டே, படத்தைத் தடை செய்வது என்ற முடிவை அரசு எடுத்தது. மேலும் கமல்ஹாசனும் இறங்கி வருவதாகத் தெரியவில்லை. படத்தில் சர்ச்சைக் காட்சிகளை நீக்க அவர் முன்வரவும் இல்லை. எனவேதான் அரசு நடவடிக்கை எடுக்க நேரிட்டது. இந்தத் தடையும் கூட 15 நாட்களுக்கு மட்டும்தான் விதிக்கப்பட்டது. மேலும் இந்தத் தடையை நீக்க உடனடியாக கமல்ஹாசன் எங்களை அணுகியிருக்கலாம். பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கலாம். ஆனால் அவர் வரவில்லை. அப்படி வந்திருந்தால், முயன்றிருந்தால் அன்றே பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால் அரசுக்கு எதிராக அவர் கோர்ட்டுக்குப் போய் விட்டார். அதன் பிறகு நடந்தது உங்களுக்கேத் தெரியும். இந்தத் தடைக்கு நான்தான் காரணம் என்று கூறுவது அபத்தமானது. சிங்கப்பூரில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. கத்தாரில், ஐக்கியஅரபு எமிரேட்ஸில், மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.இதற்கு நான்தான் காரணமா... கர்நாடகத்தில் வன்முறை வெடித்தது. மைசூரில் தியேட்டர் தாக்கப்பட்டது. ஆந்திராவில், கேரளாவில் போராட்டங்கள் நடந்தன. இதற்கெல்லாம் நான்தான் காரணமா... மேலும் 24 இஸ்லாமிய அமைப்புகள் இணைந்த கூட்டமைப்பை சிறிய குழு என்று கூறுகிறார்கள். அது எப்படி சிறிய குழுவாக இருக்க முடியும். தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்பில் ஏழரை லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் சிறிய குழுவா... என்று கேட்டார் ஜெயலலிதா. |
| கருணாநிதியை சும்மா விடமாட்டேன் Posted: 31 Jan 2013 11:49 AM PST விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக நான் கமலுக்கு எதிராக நடந்து கொண்டதாகவும், எம்.ஜி.ஆரிடம் கமல்ஹாசன் குறித்து கடிதம் எழுதியதாகவும் கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அவரை அப்படியே விட்டு விட முடியாது. அவர் மீது உரிய வகையில் அவதூறு வழக்குகள் போடப்படும் என்று எச்சரித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதுதொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டியின்போது கூறுகையில், நடிகர் கமல்ஹாசன் மீது தனிப்பட்ட துவேஷம், முன்பகை காரணமாக நான் இப்படி நடந்து கொண்டதாக ஒரு புகாரைக் கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. வேட்டி கட்டி தமிழர் பிரதமராக வேண்டும் என்று கமல்ஹாசன் பேசியதற்காக அவர் மீது நான் நடவடிக்கை எடுத்ததாக கருணநிதி கூறியுள்ளார். வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினால் நான் ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கமல்ஹாசனுக்குப் பேச்சு சுதந்திரம் உள்ளது. அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதை நான் எப்படித் தடுக்க முடியும். நான் பலவருடமாக அரசியலில் இருக்கிறேன். அரசியல் அனுபவம் எனக்கு நிறையவே உள்ளது. கமல்ஹாசன் பிரதமரைத் தேர்வு செய்வதில்லை என்பதை நான் நன்றாக அறிவேன்.100 கோடி மக்கள் உள்ளனர்.அவர்கள் வாக்களித்து ஒரு கட்சியை அல்லது கூட்டணியை ஆட்சிக்குக் கொண்டு வருகிறார்கள். பின்னர்தான் பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். எனவே கமல் பேசியதால் நான் ஏன் கோபமடைய வேண்டும். ஆனால் கருணாநிதி கண்மூடித்தனமாக இப்படி புகார் கூறியுள்ளார். அது மட்டுமல்ல, 1980களில் நான் கமல்ஹாசன் குறித்து எம்.ஜி.ஆருக்குப் புகார் கூறி கடிதம் எழுதியதாகவும் கூறியுள்ளார். இது மிகவும் கேலிக்குரிய புகாராகும். பெரும் கோமாளித்தனமான புகாராகும். நான் எம்.ஜி.ஆரை தினசரி சந்திக்கும் வழக்கம் கொண்டவர். அப்போது நான் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தேன்,எம்.பியாக இருந்தேன். தினசரி கட்சிப் பணி தொடர்பாக எம்.ஜி.ஆரை சந்திப்பேன். பிற்பகலில் மாம்பலம் அலுவலகத்தில் சந்திப்போம், மணிக்கணக்கில் பேசுவோம், சேர்ந்து சாப்பிடுவோம். அரசியல், கட்சிப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவோம். அப்படி இருக்கையில் நான் ஏன் அவருக்குக் கடிதம் எழுத வேண்டும்.அதுவும் மிகச்சாதாரண விஷயத்திற்காக. கருணாநிதி கூறியிருப்பது அருமையான புகார். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் மீது சட்டப்படியான, அவதூறு வழக்குகள் தொடரப்படும். உண்மையில் நான் எதிரியாக கருத வேண்டிய நபர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது கருணாநிதி மட்டுமே. கமல்ஹாசன் அல்ல.அவர் எனக்கு எதிரியும் அல்ல, போட்டியாளரும் அல்ல. கருணாநிதி குடும்பத்தினர் பல படங்களை எடுக்கின்றனர், வெளியிடுகின்றனர். நான் அதைத் தடுக்கவில்லையே. அப்படி இருக்கும்போது எனது எதிரி இல்லாத கமல்ஹாசன் மீது நான் ஏன் பகைமை காட்டப்போகிறேன் என்றார் ஜெயலலிதா. |
| Vishwaroopam Latest News 31-01-2013 Posted: 31 Jan 2013 11:47 AM PST |
| அமெரிக்கக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே… Posted: 31 Jan 2013 11:33 AM PST புன்னகை மன்னன் படத்தில் கதாநாயகி ரேவதி சிங்களப் பெண்ணாக வருவார். விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சில்லறை வில்லனாக வருவார்கள். அவர்கள் சிங்களப் பெண்ணைக் கடத்துவதாகவும், கமல்சார் அவர்களை அடித்து விரட்டுவதாகவும்கூட காட்சி உண்டு. சிங்களப் பெண்ணின் தந்தைதான் க்ளைமாக்ஸில் வெடிகுண்டு வைத்துக் கொல்வார் என்றாலும் அதற்கு உதவுவது இலங்கைத் தமிழ் கதாபாத்திரங்கள்தான். இது இலங்கையில் இன அழித்தொழிப்பு படு மும்மரமாக நடந்த காலகட்டத்தில் வந்த படம். வேட்டையாடு விளையாடு படத்தில் ஹோமோசெக்ஸ்காரர்களாகச் சித்திரிக்கப்படும் வில்லன்களுக்குத் தூய தமிழ்ப்பெயர். தெனாலி படத்தில் யாழ்ப்பாணத் தமிழ் பேசும் கதாபாத்திரம் ஒரு கோமாளியாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும். சிட்ஃபண்ட் நடத்துபவர்கள் ஏழை எளிய மக்களின் பணத்தையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு ஓடியபோதுதான் சிட்ஃபண்ட் நடத்தி ஏமாற்றப்பட்டு சின்னாபின்னமாகும் நல்லவர் ஒருவரைப் பற்றி படம் எடுத்தார். தென் மாவட்டங்களின் சாதி கலவரங்களுக்கு தேவர் ஜாதி அடிப்படைவாதிகளே காரணமாயிருக்க, கமலோ தொடர்ந்து தேவர் ஜாதிப் பெருமிதத்தையே தன் படங்களில் இடம்பெறச் செய்துவந்திருக்கிறார். இப்படியெல்லாம் செயல்பட்டும் கமலுக்குத் தமிழகத்தில் ஒருவகையான முற்போக்கு பிம்பம் உருவானதற்கான முக்கியக் காரணம் அவர் இந்து மதத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் விமர்சிப்பதுதான். அதையும் கூர்ந்து கவனித்தால் அவர் சைவ இந்து மதத்தை மட்டுமே எள்ளி நகையாடுவது தெரிந்திருக்கும். இதுதான் அவருடைய அரசியல் செயல்பாடுகள். இவற்றாலெல்லாம் பெரிய அபாயம் எழுந்ததில்லை. ஆனால், மாறுபட்டுச் சிந்திக்கிறேன் என்ற போர்வையில், இப்போது சர்வதேச ரவுடி அமெரிக்காவின் தரப்பு நியாயத்தை எடுத்தியம்பக் கிளம்பியிருக்கிறார். இது மிகவும் தவறானது; கேவலமானது. ஹிட்லரைப் பற்றிப் படமெடுப்பதாக இருந்தால் ஹிட்லர் பக்கம் இருக்கும் நியாயத்தைப் பேசுவார் என்று நினைக்கிறேன். பேசாப் பொருளைப் பேசுதல் என்பது வேறு. அதிகார மையத்தின் பக்கத்தில் இருக்கும் அரைகுறை நியாயங்களைப் பேசுவது என்பது வேறு. கமல் இரண்டாவதைத்தான் கால காலமாகச் செய்துவருகிறார். அந்த வகையில் அவர் ஒரு கலைஞன் என்ற மரியாதைக்கு ஒரு காலமும் உரியவர் அல்ல. அவரும் தன்னை வெளிப்படையாக ஒரு வியாபாரியாகத்தான் அடையாளப்படுத்தியும் கொள்கிறார். அப்படி இருக்கும்போது அவருடைய விஸ்வரூபம் படத்துக்குத் தடை விதிக்கப்பட்டதை ஒரு கலைப்படைப்புக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும் கருத்து சுதந்தரத்துக்கு எதிரானதாகவும் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. கமலின் இந்தச் செயலானது செருப்பு நிறுவனம் ஒன்று காலணிகளில் இந்து தெய்வங்களின் படத்தை அச்சிட்டு வியாபாரம் செய்ய முயன்றதைப் போன்ற ஒரு செயல்தான். அவர்களைப் பொறுத்தவரை சீப் பப்ளிசிட்டியில் ஆரம்பித்து விற்பனையைப் பெருக்க உதவும் ஒரு தந்திரம் அது. ஆனால், ஒரு வியாபாரிக்கு மக்கள் கூட்டத்தில் ஒரு பிரிவினரின் நம்பிக்கையை அவர்கள் எவ்வளவு சிறிய தரப்பாக இருந்தாலும் இழிவுபடுத்த எந்த அதிகாரமும் கிடையாது. இங்கு சுதந்தரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, ஒரு கலைஞனுக்குத் தரவேண்டிய மரியாதையை ஒரு வியாபாரிக்கு வீணடிக்காமல் இருப்பதுதான் ஒரு சமூகத்துக்கு நல்லது. விஸ்வரூபம் பட விவகாரத்தில் முதலில் டி.டி.ஹெச்சில் படத்தை வெளியிடுவதாகப் பொய் சொல்லி மக்களிடம் இருந்து பணத்தைக் கறந்தார். படத்தின் தேதியைத் தனது சொந்த வசதிக்காக மாற்றி வைத்ததாகச் சொன்னபோது கூட தனது மீடியா பார்ட்னர்களுக்கு நன்றி தெரிவித்தவர் பணம் கட்டிய பார்வையாளர்களுக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. இஸ்லாமிய கூட்டமைப்பினருக்குப் படத்தைப் போட்டுக் காட்டியவர் அவர்களுடைய உணர்வுகளுக்குத் துளியும் மரியாதை செலுத்தவில்லை. கதை நிகழும் களம் ஆஃப்கானிஸ்தான். அங்கே தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களாக முஸ்லிம்களைத்தானே காட்ட முடியும் என்று இன்று நியாயம் பேசுகிறார். (முஸ்லிம்களை தீவிரவாதியாகக் காட்டத்தான் ஆஃப்கானிஸ்தானைக் களமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் கமல் என்கிறார்கள் தமிழக முஸ்லிம் கூட்டமைப்பினர். இரண்டாம் பாகம் இந்தியாவில் நடக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதாவது அதில் இந்து அடிப்படைவாதிகளை கட்டம்கட்டப்போகிறார். இப்போது இஸ்லாமியர்களுக்குத் தன்மீது ஏற்பட்ட கோபத்தைச் சரிக்கட்டும் வகையிலும் தனது முற்போக்கு பிம்பத்துக்கு ஏற்பட்ட அடியை சீர் செய்யும்வகையிலும் அந்தப் படத்தை அதீதமாக எடுப்பார் என்றுதான் தோன்றுகிறது. 'கலைஞனல்லவா', இப்படித்தான் இருப்பார்.) உன்னைப் போல் ஒருவன் படத்தைப் போல இந்து ஆயுத வியாபாரி உதவுவதாக ஆஃப்கானிஸ்தானை மையமாகக் கொண்ட படத்தைக் காட்ட முடியாதுதான். இந்த விஷயம் பிரச்னையை உருவாக்கும் என்பதால், கதாநாயகனை ஒரு முஸ்லிமாகக் காட்டி பேலன்ஸ் செய்யப் பார்த்திருக்கிறார். ஆனால், இஸ்லாமிய அமைப்பினர் இந்த பம்மாத்தை நன்கு புரிந்துகொண்டுவிட்டதால் கமல் சொல்லும் எந்த சமாதானத்தையும் ஏற்க முன்வரவில்லை. இஸ்லாமியர் அமைப்பினர் படத்துக்குத் தடை கோரியதில் ஓரளவு நியாயம் உண்டு என்றாலும் அதை அவர்கள் வெளிப்படுத்தியவிதமும் பேசிய பேச்சுகளும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கவையே. சோவியத் ரஷ்யாவின் பின்னடைவுக்குப் பிறகு அமெரிக்கா இஸ்லாமியர்களைத் தனது எதிரியாக வளர்த்தெடுத்து வந்திருக்கிறது. இரட்டை கோபுரத் தாக்குதல் என்பது அமெரிக்கா இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செய்த அநியாயங்களுக்கான பதிலடியே தவிர அது முதல் தாக்குதல் அல்ல. அதைச் சாக்காக வைத்து அமெரிக்கா இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் எதிராக நடத்தி வரும் அராஜகங்கள் எல்லாம் குறைந்தபட்ச அரசியல் வாசிப்பு உள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மைகளே. அப்படியிருக்க அமெரிக்கர்களை நல்லவர்களாகக் காட்டி ஒரு படம் எடுக்கப்படுகிறது என்றால் அது அடிப்படையிலேயே இஸ்லாமியருக்கு எதிராகிவிடுகிறது. அதிலும் ஆஃப்கானிஸ்தான், இஸ்லாமிய தீவிரவாதிகள் என படத்தை எடுத்துவிட்டு படத்தைப் பார்த்தால் நீங்கள் எனக்கு தலை வாழை இலை போட்டு அன்லிமிடட் பிரியாணி தருவீர்கள் என்று நம்புகிறேன் என்று சொல்ல ஒருவருக்கு எவ்வளவு தெனாவட்டு இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு நடந்துகொள்ளும் விதம் சரியென்றேபடுகிறது. இஸ்லாமியர்கள் இந்துக்களைப் போல் மிதமாகப் போராடுபவர்கள் அல்ல. மேற்கத்திய கிறிஸ்தவர்களைப் போல் தந்திரமாக ரவுடித்தனம் செய்பவர்களும் அல்ல. இதற்கு முன்பே பம்பாய் படத்தில் ஒரு இஸ்லாமியப் பெண் இந்துவைத் திருமணம் செய்வதாகக் காட்டியதற்கே வெடி குண்டு வீசியவர்கள், அமெரிக்க தூதரகத்தை வெகு சமீபத்தில் முடக்கியவர்கள். அரசு விதித்த தடையை நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து சில திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. கரூரில் இரண்டு திரையரங்குகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் கோவையில் வேறு பல குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. இப்படி நடக்கும் என்பது அரசுக்கு முன்பே உளவுத்துறை மூலம் தெரியவந்திருக்கலாம். அதன் அடிப்படையில் அரசு படத்தைத் தற்காலிகமாகத் தடை செய்திருக்கக்கூடும். எனவே, இது சரியான செயல்பாடுதான். ஆந்திரம், மலேசியா, இலங்கை என பல இடங்களில் இந்தப் படத்தின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இது சொந்தப் பகை காரணமாக ஜெயலலிதா எடுத்த தவறான முடிவாகச் சொல்லவே முடியாது. எனவே, ரஜினிகாந்தும், கலைஞர் கருணாநிதியும் சொல்லியிருப்பதுபோல் இஸ்லாமிய தரப்பினருக்கு ஏற்பில்லாத விஷயங்களை நீக்கிவிட்டு படத்தை வெளியிடவேண்டும். மக்கள் படத்தைப் பார்த்துவிட்டு நிராகரிக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் இந்த அளவுக்கு சுதந்தரம் ஒரு வியாபாரிக்கு நிச்சயம் இருக்கவேண்டும். ஆனால், ஒரு கலைஞன் ஆஃப்கானிஸ்தான் பற்றிப் படம் எடுப்பதாக இருந்தால், இஸ்லாமிய தீவிரவாதிகளாலும் அமெரிக்க ராணுவத்தாலும் பாதிப்புக்கு உள்ளாகும் எளிய இஸ்லாமிய மக்களின் வேதனையைத்தான் படமாக்குவான். இந்து முஸ்லிம்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் படமெடுக்க வேண்டியதன் அவசியம் இருக்கும் நேரத்தில் கலை சுதந்தரம் என்ற பெயரில் இடைவெளியை அதிகப்படுத்தும்வகையில் படமெடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. பிற விஷயங்களில் எல்லாம் மிகையையும் கற்பனையையும் கட்டவிழ்த்துவிடும் திரைப்படைப்பாளிகள் சமூகப் பொறுப்புணர்வுடன் சென்சிட்டிவான விஷயங்களிலும் யதார்த்தத்தைக் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளுவது நல்லதே. பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்த்த நன்மை பயக்குமெனின் அல்லவா. அல்லது யதார்த்தத்தை சித்திரிப்பதென்றால் உண்மையை முழுவதுமாகச் சித்திரிக்கவேண்டும். தீவிரவாதிகள் குர்ரானைப் படித்துவிட்டு துப்பாக்கி தூக்குவதாகக் காட்டினால், பைபிளைப் படித்துவிட்டு குண்டு வீசுவதாகவும் காட்டத்தான் வேண்டும். அரை உண்மை எப்போதுமே அபாயமானதுதான். கலைஞனை அப்படியெல்லாம் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்பவர்கள் முதலில் கலைஞன் என்பவன் யார் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். கமலைப் பற்றிப் பேசும்போது இந்த விவாதம் தேவையற்றதுதான் என்றாலும் சொல்லிவைப்பது நல்லது என்று தோன்றுவதால் சொல்கிறேன். எம்.எஃப்.ஹுசேன் போன்றவர்கள் இந்து கடவுள்களை மையமாக வைத்து படங்கள் வரைவதுண்டு. அதை கலை சுதந்தரம் என்றும் சொல்வார்கள். ஆனால், இஸ்லாமிய உருவங்களையோ மதிப்பீடுகளையோ படமாக வரைய அவர்களுடைய தூரிகை முன்வரவே செய்யாது. அவர்களுடைய கலை ஊற்றை அப்படியாக அவர்களே சுயமாக சில கற்களைப் போட்டு அடைத்துக்கொள்ளும்போது பிற மதத்தினர் நாலைந்து கல்லைச் சேர்த்துப் போட்டால் அதையும் ஏற்றுக்கொள்வதுதான் நல்லது. அதிலும் கமலைப் போன்ற வியாபாரிகள் முழுக்க முழுக்க பணம் தரும் பினாமி எஜமானர்களுக்கு விசுவாசமாக ஒரு விஷயத்தைச் செய்யும்போது அதை அம்பலப்படுத்துவது மிகவும் அவசியமான செயல்பாடுதான். இந்தப் படம் வெளிவராவிட்டால் தன்னுடைய அனைத்து சொத்துகளும் கைவிட்டுப் போய்விடும் என்று செண்டிமெண்ட் கார்டை இறக்கிப் பார்க்கிறார். திரையுலக நடைமுறைகள் தெரிந்தவர்களுக்கு அவர் சொல்வதில் இருக்கும் பசப்புகள் நன்கு தெரிந்திருக்கும். அதோடு, இஸ்லாமியக் கூட்டமைப்பினரின் போராட்டத்தை கலாசார தீவிரவாதம் என்று சொல்லிவருகிறார். உண்மையில் அது மத தீவிரவாதம்தான். தமிழக அரசு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவிடும் என்று பயந்து படத்தை தற்காலிகமாகத் தடை செய்தால் உடனே மாநிலத்தையும் நாட்டையும் விட்டே போய்விடுவேன் என்று மிரட்டுகிறார். சாப்ளின், சல்மான் ருஷ்டி, ஹுசேன் ரேஞ்சில் தன்னைப் போலியாகக் கற்பனை செய்துகொள்வதால் வரும் உளறல் இது. புன்னகை மன்னன் படத்தில் கதாநாயகி ரேவதி சிங்களப் பெண்ணாக வருவார். விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சில்லறை வில்லனாக வருவார்கள். அவர்கள் சிங்களப் பெண்ணைக் கடத்துவதாகவும், கமல்சார் அவர்களை அடித்து விரட்டுவதாகவும்கூட காட்சி உண்டு. சிங்களப் பெண்ணின் தந்தைதான் க்ளைமாக்ஸில் வெடிகுண்டு வைத்துக் கொல்வார் என்றாலும் அதற்கு உதவுவது இலங்கைத் தமிழ் கதாபாத்திரங்கள்தான். இது இலங்கையில் இன அழித்தொழிப்பு படு மும்மரமாக நடந்த காலகட்டத்தில் வந்த படம். வேட்டையாடு விளையாடு படத்தில் ஹோமோசெக்ஸ்காரர்களாகச் சித்திரிக்கப்படும் வில்லன்களுக்குத் தூய தமிழ்ப்பெயர். தெனாலி படத்தில் யாழ்ப்பாணத் தமிழ் பேசும் கதாபாத்திரம் ஒரு கோமாளியாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும். சிட்ஃபண்ட் நடத்துபவர்கள் ஏழை எளிய மக்களின் பணத்தையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு ஓடியபோதுதான் சிட்ஃபண்ட் நடத்தி ஏமாற்றப்பட்டு சின்னாபின்னமாகும் நல்லவர் ஒருவரைப் பற்றி படம் எடுத்தார். தென் மாவட்டங்களின் சாதி கலவரங்களுக்கு தேவர் ஜாதி அடிப்படைவாதிகளே காரணமாயிருக்க, கமலோ தொடர்ந்து தேவர் ஜாதிப் பெருமிதத்தையே தன் படங்களில் இடம்பெறச் செய்துவந்திருக்கிறார். இப்படியெல்லாம் செயல்பட்டும் கமலுக்குத் தமிழகத்தில் ஒருவகையான முற்போக்கு பிம்பம் உருவானதற்கான முக்கியக் காரணம் அவர் இந்து மதத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் விமர்சிப்பதுதான். அதையும் கூர்ந்து கவனித்தால் அவர் சைவ இந்து மதத்தை மட்டுமே எள்ளி நகையாடுவது தெரிந்திருக்கும். இதுதான் அவருடைய அரசியல் செயல்பாடுகள். இவற்றாலெல்லாம் பெரிய அபாயம் எழுந்ததில்லை. ஆனால், மாறுபட்டுச் சிந்திக்கிறேன் என்ற போர்வையில், இப்போது சர்வதேச ரவுடி அமெரிக்காவின் தரப்பு நியாயத்தை எடுத்தியம்பக் கிளம்பியிருக்கிறார். இது மிகவும் தவறானது; கேவலமானது. ஹிட்லரைப் பற்றிப் படமெடுப்பதாக இருந்தால் ஹிட்லர் பக்கம் இருக்கும் நியாயத்தைப் பேசுவார் என்று நினைக்கிறேன். பேசாப் பொருளைப் பேசுதல் என்பது வேறு. அதிகார மையத்தின் பக்கத்தில் இருக்கும் அரைகுறை நியாயங்களைப் பேசுவது என்பது வேறு. கமல் இரண்டாவதைத்தான் கால காலமாகச் செய்துவருகிறார். அந்த வகையில் அவர் ஒரு கலைஞன் என்ற மரியாதைக்கு ஒரு காலமும் உரியவர் அல்ல. அவரும் தன்னை வெளிப்படையாக ஒரு வியாபாரியாகத்தான் அடையாளப்படுத்தியும் கொள்கிறார். அப்படி இருக்கும்போது அவருடைய விஸ்வரூபம் படத்துக்குத் தடை விதிக்கப்பட்டதை ஒரு கலைப்படைப்புக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும் கருத்து சுதந்தரத்துக்கு எதிரானதாகவும் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. கமலின் இந்தச் செயலானது செருப்பு நிறுவனம் ஒன்று காலணிகளில் இந்து தெய்வங்களின் படத்தை அச்சிட்டு வியாபாரம் செய்ய முயன்றதைப் போன்ற ஒரு செயல்தான். அவர்களைப் பொறுத்தவரை சீப் பப்ளிசிட்டியில் ஆரம்பித்து விற்பனையைப் பெருக்க உதவும் ஒரு தந்திரம் அது. ஆனால், ஒரு வியாபாரிக்கு மக்கள் கூட்டத்தில் ஒரு பிரிவினரின் நம்பிக்கையை அவர்கள் எவ்வளவு சிறிய தரப்பாக இருந்தாலும் இழிவுபடுத்த எந்த அதிகாரமும் கிடையாது. இங்கு சுதந்தரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, ஒரு கலைஞனுக்குத் தரவேண்டிய மரியாதையை ஒரு வியாபாரிக்கு வீணடிக்காமல் இருப்பதுதான் ஒரு சமூகத்துக்கு நல்லது. விஸ்வரூபம் பட விவகாரத்தில் முதலில் டி.டி.ஹெச்சில் படத்தை வெளியிடுவதாகப் பொய் சொல்லி மக்களிடம் இருந்து பணத்தைக் கறந்தார். படத்தின் தேதியைத் தனது சொந்த வசதிக்காக மாற்றி வைத்ததாகச் சொன்னபோது கூட தனது மீடியா பார்ட்னர்களுக்கு நன்றி தெரிவித்தவர் பணம் கட்டிய பார்வையாளர்களுக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. இஸ்லாமிய கூட்டமைப்பினருக்குப் படத்தைப் போட்டுக் காட்டியவர் அவர்களுடைய உணர்வுகளுக்குத் துளியும் மரியாதை செலுத்தவில்லை. கதை நிகழும் களம் ஆஃப்கானிஸ்தான். அங்கே தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களாக முஸ்லிம்களைத்தானே காட்ட முடியும் என்று இன்று நியாயம் பேசுகிறார். (முஸ்லிம்களை தீவிரவாதியாகக் காட்டத்தான் ஆஃப்கானிஸ்தானைக் களமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் கமல் என்கிறார்கள் தமிழக முஸ்லிம் கூட்டமைப்பினர். இரண்டாம் பாகம் இந்தியாவில் நடக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதாவது அதில் இந்து அடிப்படைவாதிகளை கட்டம்கட்டப்போகிறார். இப்போது இஸ்லாமியர்களுக்குத் தன்மீது ஏற்பட்ட கோபத்தைச் சரிக்கட்டும் வகையிலும் தனது முற்போக்கு பிம்பத்துக்கு ஏற்பட்ட அடியை சீர் செய்யும்வகையிலும் அந்தப் படத்தை அதீதமாக எடுப்பார் என்றுதான் தோன்றுகிறது. 'கலைஞனல்லவா', இப்படித்தான் இருப்பார்.) உன்னைப் போல் ஒருவன் படத்தைப் போல இந்து ஆயுத வியாபாரி உதவுவதாக ஆஃப்கானிஸ்தானை மையமாகக் கொண்ட படத்தைக் காட்ட முடியாதுதான். இந்த விஷயம் பிரச்னையை உருவாக்கும் என்பதால், கதாநாயகனை ஒரு முஸ்லிமாகக் காட்டி பேலன்ஸ் செய்யப் பார்த்திருக்கிறார். ஆனால், இஸ்லாமிய அமைப்பினர் இந்த பம்மாத்தை நன்கு புரிந்துகொண்டுவிட்டதால் கமல் சொல்லும் எந்த சமாதானத்தையும் ஏற்க முன்வரவில்லை. இஸ்லாமியர் அமைப்பினர் படத்துக்குத் தடை கோரியதில் ஓரளவு நியாயம் உண்டு என்றாலும் அதை அவர்கள் வெளிப்படுத்தியவிதமும் பேசிய பேச்சுகளும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கவையே. சோவியத் ரஷ்யாவின் பின்னடைவுக்குப் பிறகு அமெரிக்கா இஸ்லாமியர்களைத் தனது எதிரியாக வளர்த்தெடுத்து வந்திருக்கிறது. இரட்டை கோபுரத் தாக்குதல் என்பது அமெரிக்கா இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செய்த அநியாயங்களுக்கான பதிலடியே தவிர அது முதல் தாக்குதல் அல்ல. அதைச் சாக்காக வைத்து அமெரிக்கா இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் எதிராக நடத்தி வரும் அராஜகங்கள் எல்லாம் குறைந்தபட்ச அரசியல் வாசிப்பு உள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மைகளே. அப்படியிருக்க அமெரிக்கர்களை நல்லவர்களாகக் காட்டி ஒரு படம் எடுக்கப்படுகிறது என்றால் அது அடிப்படையிலேயே இஸ்லாமியருக்கு எதிராகிவிடுகிறது. அதிலும் ஆஃப்கானிஸ்தான், இஸ்லாமிய தீவிரவாதிகள் என படத்தை எடுத்துவிட்டு படத்தைப் பார்த்தால் நீங்கள் எனக்கு தலை வாழை இலை போட்டு அன்லிமிடட் பிரியாணி தருவீர்கள் என்று நம்புகிறேன் என்று சொல்ல ஒருவருக்கு எவ்வளவு தெனாவட்டு இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு நடந்துகொள்ளும் விதம் சரியென்றேபடுகிறது. இஸ்லாமியர்கள் இந்துக்களைப் போல் மிதமாகப் போராடுபவர்கள் அல்ல. மேற்கத்திய கிறிஸ்தவர்களைப் போல் தந்திரமாக ரவுடித்தனம் செய்பவர்களும் அல்ல. இதற்கு முன்பே பம்பாய் படத்தில் ஒரு இஸ்லாமியப் பெண் இந்துவைத் திருமணம் செய்வதாகக் காட்டியதற்கே வெடி குண்டு வீசியவர்கள், அமெரிக்க தூதரகத்தை வெகு சமீபத்தில் முடக்கியவர்கள். அரசு விதித்த தடையை நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து சில திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. கரூரில் இரண்டு திரையரங்குகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் கோவையில் வேறு பல குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. இப்படி நடக்கும் என்பது அரசுக்கு முன்பே உளவுத்துறை மூலம் தெரியவந்திருக்கலாம். அதன் அடிப்படையில் அரசு படத்தைத் தற்காலிகமாகத் தடை செய்திருக்கக்கூடும். எனவே, இது சரியான செயல்பாடுதான். ஆந்திரம், மலேசியா, இலங்கை என பல இடங்களில் இந்தப் படத்தின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இது சொந்தப் பகை காரணமாக ஜெயலலிதா எடுத்த தவறான முடிவாகச் சொல்லவே முடியாது. எனவே, ரஜினிகாந்தும், கலைஞர் கருணாநிதியும் சொல்லியிருப்பதுபோல் இஸ்லாமிய தரப்பினருக்கு ஏற்பில்லாத விஷயங்களை நீக்கிவிட்டு படத்தை வெளியிடவேண்டும். மக்கள் படத்தைப் பார்த்துவிட்டு நிராகரிக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் இந்த அளவுக்கு சுதந்தரம் ஒரு வியாபாரிக்கு நிச்சயம் இருக்கவேண்டும். ஆனால், ஒரு கலைஞன் ஆஃப்கானிஸ்தான் பற்றிப் படம் எடுப்பதாக இருந்தால், இஸ்லாமிய தீவிரவாதிகளாலும் அமெரிக்க ராணுவத்தாலும் பாதிப்புக்கு உள்ளாகும் எளிய இஸ்லாமிய மக்களின் வேதனையைத்தான் படமாக்குவான். இந்து முஸ்லிம்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் படமெடுக்க வேண்டியதன் அவசியம் இருக்கும் நேரத்தில் கலை சுதந்தரம் என்ற பெயரில் இடைவெளியை அதிகப்படுத்தும்வகையில் படமெடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. பிற விஷயங்களில் எல்லாம் மிகையையும் கற்பனையையும் கட்டவிழ்த்துவிடும் திரைப்படைப்பாளிகள் சமூகப் பொறுப்புணர்வுடன் சென்சிட்டிவான விஷயங்களிலும் யதார்த்தத்தைக் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளுவது நல்லதே. பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்த்த நன்மை பயக்குமெனின் அல்லவா. அல்லது யதார்த்தத்தை சித்திரிப்பதென்றால் உண்மையை முழுவதுமாகச் சித்திரிக்கவேண்டும். தீவிரவாதிகள் குர்ரானைப் படித்துவிட்டு துப்பாக்கி தூக்குவதாகக் காட்டினால், பைபிளைப் படித்துவிட்டு குண்டு வீசுவதாகவும் காட்டத்தான் வேண்டும். அரை உண்மை எப்போதுமே அபாயமானதுதான். கலைஞனை அப்படியெல்லாம் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்பவர்கள் முதலில் கலைஞன் என்பவன் யார் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். கமலைப் பற்றிப் பேசும்போது இந்த விவாதம் தேவையற்றதுதான் என்றாலும் சொல்லிவைப்பது நல்லது என்று தோன்றுவதால் சொல்கிறேன். எம்.எஃப்.ஹுசேன் போன்றவர்கள் இந்து கடவுள்களை மையமாக வைத்து படங்கள் வரைவதுண்டு. அதை கலை சுதந்தரம் என்றும் சொல்வார்கள். ஆனால், இஸ்லாமிய உருவங்களையோ மதிப்பீடுகளையோ படமாக வரைய அவர்களுடைய தூரிகை முன்வரவே செய்யாது. அவர்களுடைய கலை ஊற்றை அப்படியாக அவர்களே சுயமாக சில கற்களைப் போட்டு அடைத்துக்கொள்ளும்போது பிற மதத்தினர் நாலைந்து கல்லைச் சேர்த்துப் போட்டால் அதையும் ஏற்றுக்கொள்வதுதான் நல்லது. அதிலும் கமலைப் போன்ற வியாபாரிகள் முழுக்க முழுக்க பணம் தரும் பினாமி எஜமானர்களுக்கு விசுவாசமாக ஒரு விஷயத்தைச் செய்யும்போது அதை அம்பலப்படுத்துவது மிகவும் அவசியமான செயல்பாடுதான். இந்தப் படம் வெளிவராவிட்டால் தன்னுடைய அனைத்து சொத்துகளும் கைவிட்டுப் போய்விடும் என்று செண்டிமெண்ட் கார்டை இறக்கிப் பார்க்கிறார். திரையுலக நடைமுறைகள் தெரிந்தவர்களுக்கு அவர் சொல்வதில் இருக்கும் பசப்புகள் நன்கு தெரிந்திருக்கும். அதோடு, இஸ்லாமியக் கூட்டமைப்பினரின் போராட்டத்தை கலாசார தீவிரவாதம் என்று சொல்லிவருகிறார். உண்மையில் அது மத தீவிரவாதம்தான். தமிழக அரசு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவிடும் என்று பயந்து படத்தை தற்காலிகமாகத் தடை செய்தால் உடனே மாநிலத்தையும் நாட்டையும் விட்டே போய்விடுவேன் என்று மிரட்டுகிறார். சாப்ளின், சல்மான் ருஷ்டி, ஹுசேன் ரேஞ்சில் தன்னைப் போலியாகக் கற்பனை செய்துகொள்வதால் வரும் உளறல் இது. |
| Kasedhan Kadavuladaa - Singamuthu Tamil Movie Comedy Posted: 31 Jan 2013 11:14 AM PST |
| பொட்டு சுரேஷ் வெட்டிக்கொலை மதுரையில் Posted: 31 Jan 2013 11:15 AM PST தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், மத்திய அமைச்சர் அழகிரிக்கு நெருக்கமானவருமான பொட்டு சுரேஷ் மதுரையில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மதுரை துரைசாமிபுரம் சாலை அருகே பொட்டு சுரேஷ் நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை வெட்டிக் கொன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்து வந்த கொலையாளிகள் இந்த கொலைச் செயலை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. பொட்டு சுரேஷ் கொல்லப்பட்டதை அடுத்து மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தீவிரக் கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் மு.க. அழகிரிக்கு மிக நெருக்கமாக இருந்த பொட்டு சுரேஷ் மீது, அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. CLICK HERE TO WATCH VIDEO |
| ஆசீட் வீச்சு-முற்றுப்புள்ளி எப்போது? சென்னையில் இளம்பெண் பாதிப்பு Posted: 31 Jan 2013 11:11 AM PST புதுச்சேரியில் ஆசீட் வீச்சுக்கு ஆளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் வினோதினியின் நினைவுகள் கூட நம் மத்தியில் இன்னும் மறையவில்லை. நேற்று (ஜன.,30ம் தேதி) தான் அவர் தாக்கப்பட்ட வழக்கில் காரைக்கால் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கம் திருவள்ளூவர் சாலையில் உள்ள இணையதள மையம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் நடந்துள்ளது. ஆசிட் வீசிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் என்னும் நபர் அங்குள்ள ஸ்ரீ இணையதள மையத்தில் பணியாற்றி வந்த பெண்ணை காதலிப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தால் அந்த இணையதள மையத்திற்கு வந்த விஜயபாஸ்கர் திடீரென அந்த பெண் மீது ஆசிட்டை வீசியுள்ளார். இதில், அவரது முகம், முதுகு மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்தன. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். இதையடுத்து, விஜயபாஸ்கர் மீது ஆதம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட விஜயபாஸ்கர் பிரபல மென்பொருள் நிறுவனம் ஒன்றில் கேன்டீன் பிரிவில் பணியாற்றி வருகிறார். அவர் பாரிமுனைப் பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து ஆசிட் வாங்கியதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்று ஒரு புறம் பேசிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இன்னும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. தொடரும் ஆசிட் வீச்சு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது?!... CLICK HERE TO WATCH VIDEO |
| Posted: 31 Jan 2013 10:58 AM PST ![]() Shivam is a mythological drama about Lord Shiva and Sati, the first incarnation of his consort, Goddess Shakti. The show portrays Lord Shiva's jour Sivam Vijay Tv | Sivam Vijay Tv Serial 31-01-2013| SivamSerial 31-01-2013| Vijay Tv Serial | Vijay Tv Sivam| Tamil Serial | Vijay Tv Sivam Serial | Sivam Serial 31.01.2013.Watch Sivam 31-01-2013- Sivam Vijay Tv, Vijay Tv serial, tamil serial, tamil tv, Sivam 2013, SivamSerial, Sivam Vijay T v serial, Sivam Vijay Tv Serial, Vijay Tv Sivam , Sivam Live, Sivam Online, Vijay Tv Shivam Serial - Shivam Today Episode, Shivam Daily Serial, Daily TV Soaps, Tv Serial, Vijay Tv, Daily Drama, TV Soaps, Mega Serials Online, Watch Tamil Serial Shivam Episodes Online @ TECHSATISH.Shivam Live Serial, Shivam Serial, Shivam Vijay Tv Serial, Vijay Tv Shivam , Shivam Live, Shivam Online, Shivam , Shivam Tamil Serial, Shivam Online Serial, Shivam Live Serial, Vijay Tv Shivam Serial Free Watch Online.Watch Vijay tv Serial Shivam online today episode,Shivam Serial Today Watch Online,Vijay Tv Serials Todays Episode.Vijay Tv Serial - Shivam Live Serial, Shivam Serial Sivam Online, Sivam at TECHSATISH, Sivam Serial Watch Online Sivam- Serial | Shivam 31-01-2013 | Shivam 31-01-13 Vijay TV Serial | Vijay tv Shivam 31-01-13 | Vijay tv Serial 31st January 2013 | Watch Vijay Tv Shivam Serial 31st January 2013 | Watch Shivam 31-13-2013 Shivam 31-01-13, Shivam Serial Online 31-01-13,VijayTv Shivam 31st January 2013,31-01-13 Shivam, Shivam Today 31-01-13, Shivam 31-01-13,on,for,Episode,For,Jan,Jan,January,January Tamil SerialVijay TV Shivam 31-01-2013 online. Tamil Serial Shivam 31-01-13 online. Tamil Drama Shivam January 31st 2013 Vijay TV | Shivam 31-01-2013 | Vijay Tv Serial | Shivam 31.01.2013 | Shivam Vijay Tv Serial | Watch Online Shivam | Shivam 31-01-2013 | Vijay Tv Shows Shivam Serial 31-01-2013 | Shivam 31st January 2013 | Shivam 31-01-2013 | Vijaytv serial Shivam 31-01-2013 | Vijaytv serials 31st January 2013 online, Shivam 31-01-13, Shivam Serial Online 31-01-13,Vijay Tv Shivam 31st January 2013,31-01-13 Shivam,Latest Episode Shivam 31 January, Shivam serial 31-01-2013,Tamil TV serials Shivam Watch Online Vijay tv daily Serial Update by techsatish Latest Episode Shivam,Watch Today Episode January ,January 2013,January Vijay serial,Vijaytv serial,tv,tamil,tv serial,Vijay,Jane,ser Shivam 31-01-13 - Vijay Tv Serial | Shivam 31.01.13 | Vijay Tv Shows Shivam Serial 31st January 2013 | Vijay Tv Shivam 31-01-13 | Vijay Tv Serial 31st January 2013 | Watch Vijay Tv Serial Shivam, Shivam 31-13-13, Shivam Serial Online 31-01-13,VijayTv Shivam 31st January 2013,31-01-13 Shivam, Shivam Today 31-01-13, Shivam 31-01-13, Shivam 31-01-13, Shivam Serial Online 31-01-13,Vijaytv Shivam 13th January 2013,31-01-13 Shivam, Shivam Today 31-01-13,Vijay Serial 31-01-13,on,for,Episode,For,Jan,Jan,January,January Tamil Serial Watch Tamil Serial,Drama,Ser,Tamil Tv Shows,VijayTv,October Serial VijayTv,VijayTv Serial Free Online At Techsatish. Shivam 31-01-2013 | Vijay tv Shivam 31-01-13 | Vijay tv Serial 13th January 2013 | Shivam 31-13-2013 | Vijay tv Shivam 31-01-13 | Vijay tv Serial 31st January 2013 Watch Vijay TV Serial Shivam 31-01-13 Online At Techsatish.net | Shivam 31-01-2013 | Vijay Tv Shows Shivam Serial 31st January 2013 |
| Corruption in school education - Debate - 31-01-13 Posted: 31 Jan 2013 10:31 AM PST |
| சட்டம்,ஒழுங்கை பாதுகாக்கவே விஸ்வரூபம் படத்திற்கு தடை: முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் Posted: 31 Jan 2013 10:01 AM PST சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கத்துடனேயே விஸ்வரூபம் படத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். படத்தை முடக்க வேண்டும் என்ற எண்ணம் தமக்கு இல்லை என்று அவர் கூறினார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் விஸ்வரூபம் திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளதாகக் கூறி இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து படத்தை வெளியிட தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றதை அடுத்து, தடைக்கான காரணம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வியாழக்கிழமை விளக்கம் அளித்தார். தமிழகம் முழுவதும் 524 திரையரங்குகளில் படம் வெளியாக இருந்ததால், அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கொடுப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று அவர் கூறினார். மேலும் படத்தை முழுமையாக தடை செய்ய நினைத்திருந்தால் பட ஒழுங்குமுறை சட்டம் 1955, பிரிவு 7-ன் படி நேரடியாக தடை செய்திருக்க முடியும் என்றும் ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார். விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு வேண்டும் என்றே தடை விதித்ததாக கூறப்படுவதை அவர் மறுத்தார். 144 தடை உத்தரவு என்பது 15 நாட்களுக்கான தற்காலிக தடை உத்தரவுதான் என்றும் அதற்குள் நிலைமை சரியாகும் என்ற எண்ணத்துடனேயே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். விஸ்வரூபம் படத்திற்கான தொலைக்காட்சி உரிமத்தை குறைந்த விலைக்கு ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்காததும், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், பிரதமராக வேண்டும் என்று கமல்ஹாசன் பேசியதுமே அரசின் தடை உத்தரவுக்கு காரணம் என்ற விமர்சிக்கப்படுவதை ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்தார். தமக்கோ, அதிமுகவுக்கோ, அந்த தொலைக்காட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்த ஜெயலலிதா, ப.சிதம்பரம் பிரதமராக வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என்றார். கமல்ஹாசன் என்ற தனிப்பட்ட ஒருவர் மட்டுமே, பிரதமரை தேர்வு செய்துவிடமுடியாது என்பதால் அவரது பேச்சு குறித்து தாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார். விக்ரம் திரைப்பட விவகாரத்தில் கமல்ஹாசனை விமர்சித்து அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியதாக கருணாநிதி குற்றம்சாட்டியிருந்தார். கருணாநிதியின் இந்த புகார், அபத்தமான கற்பனை என விளக்கமளித்த ஜெயலலிதா, இதுதொடர்பாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார். மேலும் கருணாநிதியின் குற்றச்சாட்டை வெளியிட்ட ஊடகங்கள் மீதும் வழக்கு தொடரப் போவதாக அவர் குறிப்பிட்டார். கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் திரைப்படங்களை தாம் தடை செய்யாத நிலையில் கமல்ஹாசன் படத்தை மட்டும் தாம் வேண்டுமென்றே தடை செய்ததாக கூறுவது தவறு என்றும் படத்தை வெளியிடுவது தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், கமல்ஹாசனும் ஒன்றாக அமர்ந்து பேசி பிரச்னைக்கு தீர்வு கண்டால், படம் வெளியாவதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றும் ஜெயலலிதா உறுதி அளித்தார். |
| விஸ்வரூபம் : சிக்கல்களும், சவால்களும் Posted: 31 Jan 2013 09:59 AM PST விஸ்வரூபம் திரைப்படம், ஜனவரி 10ம் தேதி டிடிஎச் தொழில்நுட்பத்தில் வெளியாகும் என படத்தின் இயக்குனரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த 4ம் தேதி அறிவித்தார். இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே ஒரு முன்னோடியாகவும், திரையுலக வரலாற்றில் மைல் கல்லாகவும் இருக்கும் எனவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். கமலின் அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டிடிஎச் -ல் வெளியாகும் படத்தை திரையிட மாட்டோம் என அவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். அதனைத்தொடர்ந்து, கடந்த 6ம் தேதி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்த கமல்ஹாசன், டிடிஎச் -ல் படத்தை வெளியிடும் தனது முயற்சிக்கு சிலர் மிரட்டல் விடுப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து கடந்த 9ம் தேதி மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் டிடிஎச் தொழில்நுட்பத்தில் விஸ்வரூபம் படத்தை வெளியிட ஆலோசனை நடத்தி வருவதாக கூறினார். எனினும், டிடிஎச் தொழில்நுட்பத்தில் படம் வெளியிடும் முடிவில் மாற்றமில்லை என்றும் அப்போது கூறினார். பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, கடந்த 10ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன் 25ம் தேதி படத்தை திரையரங்கில் வெளியிடுவதாகவும், பிப்ரவரி 2ம் தேதி டிடிஎச் -ல் வெளியாகும் என்றும் அறிவித்தார். கடந்த 23ம் தேதி இப்படத்தை பார்வையிட்ட முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள், படத்தில் இஸ்ஸாமிய மக்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையேற்று இரண்டு வாரங்களுக்கு படத்தை வெளியிட 24ம் தேதி தமிழக அரசும் தடை விதித்தது. அதனைத்தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் 25ம் தேதி கமல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், மனு மீதான முடிவை அறிவிப்பதை 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதே நேரத்தில், கடந்த 26ம் தேதி நீதிபதி வெங்கட்ராமன் மற்றும் வழக்கறிஞர்கள் விஸ்வரூபம் படத்தை பார்வையிட்டனர். 28ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணையின் போது கமல் தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டதால், வழக்கின் முடிவு நேற்று அறிவிக்கப்படுவதாக இருந்தது. நேற்று காலை வழக்கு விசாரணை தொடங்கிய போது, தமிழக அரசு தரப்பில், விஸ்வரூபம் படத்திற்கு, முறைகேடாக தணிக்கைச் சான்றிதழ் பெறப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் பிற்பகல் நடந்த விசாரணையின் போது ஒரு நிமிடத்திற்கும் அதிகமான அளவு காட்சிகளை நீக்கிய பின்னரே அனுமதி அளித்ததாக தணிக்கைக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு தாமதங்களுக்கு பின்னர் இரவு பத்தரை மணியளவில் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடை செல்லாது என நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்தார். இதையடுத்து இன்று காலை தமிழகத்தின் பல பகுதிகளில் படம் திரையிடப்பட்டது. எனினும், தமிழக அரசு மேல் முறையீடு செய்ததால், படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பிற்பகல் 3 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், திருக்குரான் தொடர்பாக வரும் காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறினார். அதே நேரத்தில் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடை செல்லாது என நீதிபதி வெங்கட்ராமன் அளித்த தீர்ப்புக்கு, 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தடை விதித்தது. |
| Posted: 31 Jan 2013 09:49 AM PST |
| Girl likes Boy’s Style and Action – Neeya Naana Posted: 31 Jan 2013 09:47 AM PST |
| Vaniga Seithigal 31-01-2013 - Sun tv Trade news Posted: 31 Jan 2013 09:44 AM PST |
| Virunthinar Pakkam – Sooriya Vanakkam Sun TV 31-01-2013 Posted: 31 Jan 2013 09:42 AM PST |
| Posted: 31 Jan 2013 09:39 AM PST |
| Lucky Biker Nearly Crushed by Truck Posted: 31 Jan 2013 09:38 AM PST |
| Funny Video – Shortest Wedding in History! Posted: 31 Jan 2013 09:37 AM PST |
| Most drumbeats in a minute, hand drumming – Guinness World Records Posted: 31 Jan 2013 09:35 AM PST |
| Settai Movie Official Trailer – Arya -Santhanam – Premgi – Hansika – Anjali – Nasser Posted: 31 Jan 2013 09:33 AM PST JK (Arya), Nadupakka Nakki (Santhanam) and Seenu (Premgi) are flat mates, buddies in the same publication and partners in a simple crime. JK is to get married in a month but still doesn't know if his fiancé Madhu (Hansika) or friend Shakthi (Anjali) is THE RIGHT ONE! Seenu can't make up his mind who he wants to kill first -- his girlfriend Gayathri (Natchathira), who has just dumped him or his stupid, annoying boss (Chitra Lakshmanan) whose idea of creativity is sketching a smiling banana! And Nadupakka Nakki is about to discover that eating delicious tandoori chicken off a street vendor is going to give him the worst case of Diarrhea he's ever known! Three regular blokes, living the regular life EXCEPT for one small detail -- they are on the hit list of one of the world's deadliest crime syndicates led by Nasser. Will they be able to get away before the shit hits the roof and it comes crashing down? |
| You are subscribed to email updates from techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
























